Tuesday, July 22, 2008

கவிதைக் கலகம்

என்னோடு
சமாதானம் பேச வந்தது
வெள்ளைத் தாள்

முகமெல்லாம்
கரி பூசி
அனுப்பி வைத்தேன்

இப்போது
உலகெங்கும்
கலகம் பேசித் திரிகிறது
அது

No comments: