Saturday, July 26, 2008

மெய்வழி!

பொய் வீடு விட்டு
மெய் வீடு புக்க
பொய் வீட்டுக்குள்ளேயே
மெய்யாய் இருக்குதே
இருதய வழி!
"இரு தயவாய்" என்ற வள்ளல்
பெருமான் உபதேசப்படி
நீ தயவாய் இருக்க
இருதய வாய் திறந்து
தெரியுமே அம்மெய்வழி!

No comments: