Wednesday, July 9, 2008

'ரு'

திடமாய் நிற்கும் மெய்
திரவமாய் ஓடும் உயிர்ப்பில் கரைய
பிடிபடும் பெருவாழ்வின் அர்த்தம்

உயிர்ப்பில் கரைய மறுக்கும் மெய்
மரணம் கவ்வப் பொய்யாகும்
பிடிபடாமல் போகும் பெருவாழ்வின் அர்த்தம்

கவனம் சிதறி
உயிர்ப்பை மறந்த அவலம் போக
உயிர்ப்பில் வை கவனம்

திரும்ப மறுக்கும் மனத்தால்
தோன்றும் பிறப்பும் இறப்பும்
திரும்பி மனம் உயிர்ப்பைக் கவ்வப்
பிடிபடும் மெய்யின் அர்த்தம்

வாழ வைக்கும் மூல ஒன்றில்
கவனம் ஒரு சிறிதும் இன்றித்
தேய்வதா உன் விருப்பம்

கவனமாய் 'ரு'வை உள்வாங்கின்
இதயம் இருதயமாய் மாறும்

'ரு'வின் பெருந்தயவே
மெய்யைக் கரைத்துப்
பொய்யை வெல்லும் உபாயம்

கவனமாய் உள்வாங்கிய 'ரு'வைத்
தயவாய் வெளிவிட்டு
உலக உயிர்த்திரள் அனைத்தையும்
நிபந்தனையின்றி நேசித்தால்
'ரு'வின் பெருந்தயவு வாய்க்கும்

அல்லாவின் அருளால்
இல்லாமல் போகும் மரணம்
அதற்கு
அல்லாவின் அருளாம் 'ரு'வெனும்
உயிர்ப்பாம் மூச்சின் மேல் வை கவனம்
பிடிபடாத அர்த்தம் பிடிபடப்
பிடிபடும் மெய் பிடிபடாமல் கரைய
வாய்க்கும் பெருவாழ்வின் பேரின்பம்

No comments: