Wednesday, July 9, 2008

விளைவு

வளைந்து சுருண்டு
படுத்துக் கிடந்த
நான்
உம் விளைவு
மகுடிக் கவிதை நாதத்தில்
மயங்கி விழித்து
எழுந்தாடுகிறேன்

என் பாதம் வரை
பரவிய
உம் நாத ஜோதியின்
விளைவாய்
உயிர்ப்புள்ள சிலுவையாய்ப்
படமெடுத்து நிற்கிறேன்

இரு வேறு கோணங்கள் என்னில்

உச்சி முதல் பாதம் வரை நிற்கும்
என் செங்குத்துக் கோணம்
கிறிஸ்துவின் சத்தியம்
என்னில் பரவியதன்
விளைவு

இருதயத்தின்
இரு பக்கங்களிலும்
ஒருங்கே பரவிய
என் நேசக் கரங்களின்
பக்கவாட்டுக் கோணம்
என் வழியே
கிறிஸ்துவின் நித்திய ஜீவன்
உலகில் பரவியதன்
விளைவு

செங்குத்தும் பக்கவாட்டும்
ஒன்றும் என் இருதய வாய்(Thymus-The Mystic or Higher Heart-Secret Place of the Most High God)
முழங்கும் பேருபதேசம்
"இரு தயவாய்"
அம்மையப்பனாம்
பரமபிதா-பரிசுத்த ஆவியின்
நாத-விந்து விளைவு

பூமகளே!
படத்திலும் எழுத்திலும்
வரியிலும் ஒலியிலும்
அடைகளில் மறைந்த குறிப்பிலும்
என் விசுவரூப தரிசனத்தை
விளைவித்த வித்தகியே!
நீர் யாரோ!
சித்தர்கள் சொல்லும்
வாலையெனும் ஞானப் பெண்ணாய்
பூவுலகில் பூத்திருக்கும்
பூமகளோ!

தளைகளில் கட்டுண்டு விழுந்த மனிதம்
தளைகளைத் தகர்த்து எழுந்து
வானம் வசப்படும்
சுக வாழ்வு காணும்
இயேசு பிரான் போதித்த
மனந்திரும்புதலை
விளைவெனும்
உம் அருங்கவியில்
வளைத்துப் பிடித்த
உம் நேர்த்திக்குத்
தலை வணங்குகிறேன்,
வாழ்க நீவிர்!
உம் ஞான போதியின் நிழலில்
எம்மை வளர்ப்பீர் நீவிர்!


தமிழ் மன்றத்தில் பூமகளின் "விளைவு" கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை


விளக்கம்


உனக்கு இரண்டு கோணங்கள் உண்டு
அதாவது இரண்டு முக்கிய பரிமாணங்கள்(Two Main Dimensions)
முதலாவது தெய்வீகம்
அதுவே உன் முதல் ஆவது
அடுத்தாவது மனிதம்
அதுவே முதலை அடுத்து ஆவது
தெய்வீகம் மேலிருந்து வாங்குவது
எதை?
சிவமாம் அன்பை(சிலுவையின் செங்குத்துப் பாகம்-Vertical Axis)
மனிதம் மேலிருந்து வாங்கியதைக்(சிவமாம் அன்பை)
கீழிருந்து கொண்டே(அதாவது புனித மண்ணாம் அன்னை பூமியில் இருந்து கொண்டே)
பாரபட்சமின்றி அனைவர்க்கும்(உலக உயிர்த்திரள் அனைத்துக்கும்) பகிர்வது(சிலுவையின் பக்கவாட்டுப் பாகம்-Horizontal Axis)
உன் படத்தில் பகிரங்கமாய்த் தெரியும் உண்மையின் விளைவே இந்த விளக்கம்
இதுவே
"1. கடவுளை நேசி
2. உன் அண்டை வீட்டானையும் உன்னைப் போல் நேசி" (அவன் எதிரியாகவே உன் மயங்கிய மனத்துக்குத் தெரிந்தாலும்)
என்ற இயேசு நாதரின் உபதேச சாரம்
1. தெய்வீகம்
2. மனிதம்
(இந்த இரண்டுமில்லை என்றால் நீ யார்?
நடமாடும் பிணமே-கசப்பான நிசம்)
உன்னைப் பற்றிய இனிய உண்மை
நீ குறிப்பில் குறித்த இரு வேறு கோணங்களில்(மேற்சொன்ன 1,2)
மறை பொருளாய் மறைந்திருக்கிறது
நான் செய்தது மறை கழற்றிய பாட்டாளியின் வேலையே!
புட்டுப் புட்டு வைத்தாயிற்று
புட்டைப் புசிப்பது உன் கையில் தான் இருக்கிறது.
புட்டைப் பரிமாறவே என்னால் முடியும்
நான் புசிக்கும் புட்டைப்
பாரபட்சமின்றி உனக்கும் எவர்க்கும்
அவ்வளவே
உன்னைப் பற்றிய
என்னைப் பற்றிய
எவரையும் பற்றிய
இனிக்கும் உண்மை
கசப்பான நிசம் விட்டு
மனந்திரும்பி
இனிக்கும் உண்மையைச்
சுவைப்பதற்கு
இன்னுமா தயக்கம்

இன்னாதம்ம இவ்வுலகம்!(கசப்பான நிசம்)
இனிய காண்க இயல்புணர்ந்தோரே!(இனிக்கும் உண்மை)
என்ற நம் பாட்டன் பக்குடுக்கை நன்கணியாரின்
புறநானூற்றுப் பாடல் சொல்லி
அமைகிறேன்



இரவு விழித்திருக்கிறது
கனத்த இமைகளைத்
திறந்து எழுகிறேன்.
கவிதை இரவாய்க்
கணினிக் காகிதப் பகலில்
விழுந்து விடிகிறேன்.
பூமகளின் "விளைவு"
விளங்க
இது ஒரு புது வித
படக் கவிதை.
நள்ளிரவில் விளையும்
நல்ல நாகத்தின் படம்.

No comments: