Tuesday, July 22, 2008

நானே நீ! நீயே நான்!

உன்னால் எழ முடியும்
எழுந்து காட்டு!
நானிருக்கிறேன்
எப்போதும்
உன்னுடன்
உன் உயிராக
உன்னை ஆதரிக்க
உன்னை அரவணைக்க..
இக வாழ்வின் பல்வேறு பரிமாணங்கள்
பர வாழ்வின் படிக்கட்டுகள்.
நீயாக
இகத்தில் விழுந்திருப்பது
நானே மனிதா!
நானாகப்
பரத்தில் எழுந்திருப்பது
நீயே மனிதா!
விழுவது நானென்றால்
எழுவது நீ!
உயிராம் என் விழுதலால்
மெய்யாய் விழித்தெழு நீ!
உயிர்மெய் ஒருமையாய்
நானே நீ!
நீயே நான்!


தமிழ் மன்றத்தில்  மீரா அவர்களின் "நீ அல்ல நான்" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை.

No comments: