Wednesday, July 9, 2008

மெய்யின் சுயசரிதம்(நனி மிகச் சுருக்கமாய்!)

சும்மா இருக்கும்
ஆகாசம்

ஆகாசத்தின் சலனம்
வாசி

வாசியில் சுடச்சுட மலரும்
நெருப்பூ

நெருப்பூவில் சில்லென ஊறும்
அமுத நீர்

அமுத நீரின் வேரில்
திடமாய்ப் பழுத்த பலா
மெய்

No comments: