Wednesday, July 9, 2008

உன் மெய்

ஒளிந்திருக்கும் உயிர்ப்பே
வெளிப்பட்டிருக்கும் உன் மெய்
பிடிபடும் உண்மை அது.
உள் மையாம் உயிர்ப்பின் உள் மெய்
பிடிபடாத காரணத்தால்
மரணப் பொய்யின் மாயாஜாலம்.
வள்ளலின் வாய்மை பிடித்தால்
பெருவாழ்வு பிடிபடும்!
உண்மையிது
வெறும் வாய்வீச்சல்ல!

No comments: