Tuesday, July 22, 2008

என் முரட்டுக் குரல்

நான்
உரக்கத் தான் பேசுகிறேன்

என்றாலும்
அந்த வார்த்தைகளால்
காதுகளைச் சுற்றிலும்
எழுப்பப்பட்ட
இருப்புச் சுவர்களைத்
தகர்க்க முடிவதில்லை

இருந்தாலும்
முட்டி மோதிச்
சிதையும் என் வார்த்தைகள்
அவற்றைத் தகர்க்கும் முயற்சியைக்
கை விடுவதில்லை

கரை மீறிப் பொங்கும்
அலைகளைப் போல
என் வார்த்தைகளும்
சுவர்களை மீறிக்
காதுகளில் பாயும்

செவிப் பறைகளின்
முழக்கத்தில்
நெற்றிகள் விழிக்கும்

முரட்டு அலைகளின் மீது
சத்தியம்

No comments: