Friday, April 11, 2008

கடவுளின் பதில்-1

பச்சிளங்குழந்தையாம் நீ
வளர்ந்து
அறிவில் முதிர்ந்து
எனக்கும் உனக்கும் இடையில்
இருக்கும் மாயத்தூரங் கடந்து
கல்மனம் பிளந்து
நான் இருக்கும் சேம இடமாம்
இருதயம் கண்டு
உன் பாதங்களில் என் பாதம்
பொருந்தியிருக்கும் மெய்ம்மையுணர்ந்து
என்னில் வேறற ஒன்றி
வேலெடுத்து
நோகடிக்கும் பொய்யை
சாகடித்தே
ஆன்ம லாபம் பெறுவாயே!


தமிழ் மன்றத்தில் கவிதா அவர்களின் "கடவுள் மீண்டும் மிருகமாய்-1" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை.

No comments: