Tuesday, April 8, 2008

சுகித்திருக்கிறோம்

வள்ளலே!
என்னவனாகி
நீ என்னுட் கலந்தாய்.

என் நம்பிக்கை
இன்று நிசமானதே!
உன்னை விட்டு
நானே வலிந்து விலகியதால்
நான் விலை கொடுத்து வாங்கிய
போராட்டங்கள்
மனக்கசப்புகள்
வேதனைகள்
சோதனைகள்
சூழ்ச்சிகள்
துரோகங்கள்
எதிர்ப்புகள்
இது போன்ற
கபட வித்தைகள் யாவும்
உம் வரவால்
கதிரொளி பட்ட பனி போல்
கரைந்து விட்டன.
எப்போதும் பிரியாப் புணர்ப்பிலே
இன்று முதல் ஒன்றி விட்டோம்.
கருத்தொருமித்த காதலராய்ச்
சுகித்திருக்கிறோம்.


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "சகித்துக்கொள்ளும்" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

No comments: