Wednesday, April 30, 2008

காக்கைகள்

மரத்தில் பூக்குமா
கருப்பு மலர்கள்
ஓ.... காக்கைகள்

மரத்தில் பூத்து
விண்ணில் உதிரும் மலர்களா
காக்கைகள்

ஒளியை ஊடுருவிப் பாயும்
இருளின் கீற்றுகளா
காக்கைகள்!!!

மர வானில் மின்னும்
கருப்பு நட்சத்திரங்களோ
காக்கைகள்

பட்டப்பகலிலும்
விடியாத இரவின் திட்டுகளோ
காக்கைகள்

No comments: