Thursday, April 24, 2008

சொல்லாமல் சொல்லிவிட

கடந்தாயிற்று
கடைசிச் சுவர்.
அடைந்தாயிற்று
அதிசய வீடு.
பேரா இயற்கையாய்ப்
பேரானந்தம்
சொற்கடந்ததேயாயினும்
வீடு விட்டு
சுவர்களின் வியூகத்துள்
புகத்தான் வேண்டும்
சொல்லாமல் சொல்லிவிட.

No comments: