Saturday, April 5, 2008

உந்தன் கருணைக்கு உண்டோ ஈடு!

கடவுளே.......
சோகம் என்ற புடத்திலிட்டு
என்னைச்
சொக்கத்தங்கம் ஆக்கினாய்!
முரண்டு பிடிக்கும் மனிதனென்னை
உன்னில்
திரண்டிருக்கும் தந்திரம் சொன்னாய்!
என்னை நீ வணங்க வேண்டாம்
மகனே(ளே)
என்னோடு நீ இணங்கினால் போதும்

என்ற மந்திர வார்த்தை சொல்லி
என்றென்றும்
என்னை உன்னோடு
இணைத்துக் கொண்டாய்!
இகத்தில்
யந்திர வாழ்வின் இன்னல்கள் தீர்த்தே
இகத்திலேயே
பரத்தின் பரமானந்தம் தன்னை
என்னுள்ளே நிறைக்கிறாய்!

ஆண்டவா!
என்னுள்ளே நீ
நிரந்தரமாய் இருக்கிறாய்

என்ற பேருணமை உணர்த்தியே
உன்னுள் நான்
நிரந்தரமாய் இருக்க வழி செய்த
உந்தன் கருணைக்கு உண்டோ ஈடு!


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "இரக்கம் இல்லையா" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

No comments: