Saturday, April 5, 2008

உயிரானவனே

உயிரானவனே!
என் மெய்யென்னும்
அமர கவிதையின்
கருப்பொருளானவனே!
அன்பென்னும் மூலவனாய்
என் இருதயம் அமர்ந்தவனே!
கேள்வியெல்லாம் கழிந்த பின்னே
உறுதியாய் என்னுள் எழுந்தவனே!
எனைவிட்டு ஓர் கணமும் பிரியாத
கடவுளென்னும் காதலனே!
நிஜமென்னும் வத்துவாய்
என்னுள்ளே நிறைந்தவனே!
எப்போதும் எனைப் புணர்ந்தே
ஒப்பில்லா மேனிலை மேல்
எனை வைத்தவனே!
இப்பாரில் எவர்க்குமே
என்னிலை வாய்க்கவே
தப்பாமல் அருள்வாயே
தனித்தலைமை நாயகனே!


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "உயிரானவனே" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

No comments: