Tuesday, April 8, 2008

ஆன்மானுபவம்

என் மீது
காதல் கொண்டுத்
தன்னையே
என் போல் மாற்றிக்கொண்ட
என் கடவுட் காதலனுக்கு
துதிப்பா

பொய்யுலக வாழ்க்கையில்
தொலைந்து போன என்னை மீட்டு
மெய்ஞ்ஞானக் கல்வி தந்து
மெய்யுலக வாழ்வில் வைத்தாய்
ஏதுமின்றி ஏழையாய் இருந்த என்னை
அருட்செல்வனாக்கும் அரும்பொருள் தந்தாய்
அவக்குழியில் கிடந்த என்னை எழுப்பித்
தவக்குன்றின் மேல் வைத்தாய்
எண்ணும் எழுத்தும் அறியாதிருந்த என்னை
ஜோதிமிகு நவகவிதை எழுத வைத்தாய்

உன் மௌனத்தை எடுத்தியம்ப
உன்னத வார்த்தை தந்தாய்
உறுதியோடு நான் உரைத்த உன்னதங்கள்
உறுதியாய் வெளிப்படச் சம்மத்தித்து
உலகம் உய்ய என்னையும்
உன் போல் ஆக்கி விட்டாய்

நீ
என்னை ஆட்கொண்ட
அதிசயத்தை
அற்புதத்தை
எப்படிச் சொல்வேன்
நீயே இயம்பு


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "துரோகம்" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

No comments: