Saturday, April 26, 2008

எழுஎழு இக்கணம்

பாதை தெரியுது ஜன்னலின் வழியே
பாதங்கள் இருக்கு கதவைத் திறக்க
நடந்தால் போதும் இலக்கைச் சேர
முடக்கம் உதறி முனைப்போ டெழுந்தால்
முடியும் நினைத்தது திண்ணம் திண்ணம்
அடியெடு மண்ணும் விண்ணும் உன்வசம்
விழிதிற நிச்சயம் விடியும் வாழ்க்கை
வழிஉள அறியும் விளக்கும் உன்னிடம்
எழுஎழு இக்கணம் மெய்தான் மெய்தான்
விழுந்துநீ கிடப்பது அறிந்திடு அறிந்திடு
எழுந்துநீ நிற்பதும் மெய்யே மெய்யே
எழுந்தால் மனிதா நீயே கடவுள்
விழுந்தே கிடந்தால் புழுவினும் இழிஞன்
எழுஎழு இக்கணம் அமர தேவமாய்

No comments: