Thursday, April 24, 2008

வீடு

காட்டு வழியில்
தொலைந்து போன என்னைத்
தேடாதீர்
இந்த சுவர்களுக்கிடையே.
வீடென்பீர்
விடாமல்
இத்தளைகளைப் பற்றி.
வீட்டைத் தேடிச்
சுற்றிச் சுற்றி அலுத்து
விட்டு விட்டேன்
சட்டெனக் கண்டு விட்டேன்
காட்டு வழி.
பழகாத பாதையில்
பாதம் பட்டதும்
கற்களும் முட்களும்
என்னை மீட்டியதும்
மௌன குரு
முன்னே வழி காட்டியதும்
எப்படிச் சொல்வேன்
உமக்கு?!
சுவர்களை எழுப்பிக்
கட்டுவதை
வீடென நம்பும் உம்மிடம்
சுவர்களைத் தகர்த்து
உறுதியாய் வீடு கட்டும்
காட்டுக் கலையைக்
காட்ட முடிந்தால்
இக்கவியெதற்கு?!

No comments: