Monday, April 14, 2008

உயிர்மெய்

மரத்தில் எழுந்தால் பெயர் இலை
மண்ணில் விழுந்தால் பெயர் சருகு
மரத்தில் எழுந்து மண்ணில் விழுந்து
மண்ணில் விழுந்து மரத்தில் எழுந்து
பெயர்களில் அடைபடாதும்
இயக்கம் தடைபடாதும்
சுதந்திரமாய்ச் சுழலும் மெய்ப்பொருள்
எப்போதும் உயிர்த்தே இருக்கிறது
எங்கும் எதிலும்

No comments: