Tuesday, April 8, 2008

இருதய இன்பம்

வள்ளலே!
இரவு நீள்கிறது.
இருதயம் உனக்குள் ஆழ்கிறது.
பட்டப்பகல் வெளிச்சமாய்
உன் ஒளி வட்டம்
என் மெய்யுள் அழுந்த

மாயைத் திரைகள் கரைந்து
என் இருதய விழி திறக்கிறது.
உறக்கம் கலைகிறது.
உன் அருளுண்ணப் பசித்து
உன் ஒளி காண விழித்து
உன்னைப் புணரத் தனித்து

நான் செய்த தவங்கள் நிறைவேறி
இன்றிரவு
உன் அருளுண்கிறேன்
உன் ஒளி காண்கிறேன்
உன்னைப் புணர்கிறேன்
.
இருதயத் தாமரையின்
ஓராயிரம் இதழ்களும்
ஒருங்கே மலர
மூளையின் மடல்கள்
ஒவ்வொன்றாய் விரிகின்றன.
நான் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம்

என்றே
என் இருதய இன்பைப்
பகிர்கிறேன்
உனக்குக் கோடானு கோடி
நன்றி சொல்லி.


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "இதயத்தின் வலி..." கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

No comments: