Tuesday, April 8, 2008

பற்றிய திரி

மரணத்தை நான் சுடப்
பற்றிக் கொண்டது மரணம்.
எரியும் மரணம்
எறிந்த ஒரு தீப்பொறியில்
பற்றிக் கொண்டது உன் திரி.
பற்றிய திரியில்
ஒளிரும் வாலையைப்
பற்றியே உறுதியாய்
நீ
நிற்கின்றாய்
என் அன்புத் தங்காய்!
பற்றியுன்னைத் தின்ற
வலிகளைத்
திரியில் பற்றி எரியும்
சுடரில்
ஆகுதியாய் வார்க்கிறாய்!
உன் உள்ளொளி வலிமையை
விடாமல் பற்றி நில்
நல்லிலங்கைப் பெண்ணே!
வாலை பெற்ற ஞான மகளே!
உன் உள்ளொளியால்
எம்மையும் விளக்குவாயே!
எமக்கும் வலிமை சேர்ப்பாயே!
உனதண்ணன் வேண்டுதலும்
உவந்தே ஏற்பாயே!
என் இதயங்கனிந்த நன்றியே
என்றுமுனக்குத் தங்கையே
!

No comments: