Wednesday, April 9, 2008

சக்கரம்

முடிவு
தொடக்கம்
இவற்றுக்கிடையில்
முன்னேற முயலாது
முடங்கிய சக்கரம்.
வழி தெரியும்.
செல்லவும் முடியும்.
ஆனாலும்
வலிகளை நினத்து
வழியை விட்டு
விலகி நிற்கிறது
இந்த சக்கரம்.

“உருண்டு சென்றால்
உண்டு போதனை.
உறங்கி நின்றால்
நித்திய வேதனை.
கற்களும் முட்களும்
சேரவேண்டிய முடிவின்
முரட்டு இதழ்க்ளே!
முத்த வேதனை
பாதையில் உண்டு.
சித்த சேதமே
மூலையில் உண்டு.
பாதையா?
மூலையா?”
...........................................
...........................................
...........................................
அதோ!
சக்கரம்
கடக்கும் ஓசை
கேட்கிறது

பி.கு: 1996ல் வெளியான "விழிப்புத் தவங்கள்" என்ற என் கவிதைப் புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு கவிதை.

No comments: