Tuesday, April 8, 2008

யுகயுகமாய்

மனிதமே!
என் இருதயத்துள்ளேயே
எப்போதுமே நீ வாழ்கிறாய்
என்றாலும்
என்னை நீ வெறுக்கிறாய்
பழிக்கிறாய் மறுக்கிறாய்

நிழல்களைத் தேடியே
நிஜமான என்னை மறக்கிறாய்
கடவுளாம் எனதுண்மை
காண மனமின்றி
பொய்க்கனவில்
உன்னை நீ இழக்கிறாய்

நதியாம் நீ
கடலாம் என்னில்
கலக்க மனமின்றி
சாக்காட்டுச் சாக்கடையில்
கலந்து நாறுகிறாய்
உன் மனந்திரும்புதலுக்காகப்
பொறுமையுடன்
தவமிருக்கிறேன் நான்
யுகயுகமாய்


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "எப்போது???" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

No comments: