Saturday, April 5, 2008

புரிகிறது

பொய்யுறவுகள் ஆயிரமாயிரம்
என்னைப் பற்றி
என் உயிர்ச் சக்தியைக் கழித்தன.
பற்றவற்றை மொத்தமாய் விட்டு
கடவுளுன் மெய்யுறவு
ஒன்றை மட்டும் பற்றி
என் உயிர்ச் சக்தியைக் கூட்டுகிறேன்.

நன்றாகப் புரிகிறது
பொய்யுறவின் கழித்தல் கணக்கும்
மெய்யுறவின் கூட்டல் கணக்கும்.
பொய்யுறவைக் கழித்து
மெய்யுறவைக் கூட்டி
ஏறுகிறேன் பெருவாழ்வை நோக்கி.
இப்போது புரிகிறது
பொய்க்கணக்கின் துக்கமும்
மெய்க்கணக்கின் சந்தோசமும்.


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "புரியவில்லை" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

No comments: