Monday, April 28, 2008

சொல் வித்தை

இருதய
மூளை
முனைகளில்
இழுத்துக் கட்டப்பட்டு
நாணேற்றப்பட்ட
நரம்பு

வளைகிறேன்
நான்

புறப்பட்டுவிட்ட
சொற்களின் குறியிலிருந்து
தப்ப முடியாமல்
நீ

சொற்களின் கூர்முனைகள்
உன் புலன்களை ஊடுருவும்
இன்ப வேதனையை
நீ
அனுபவிக்கும் வரை
இன்னொரு வளைதலுக்காய்க்
காத்திருக்கிறேன்
நான்

No comments: