Wednesday, April 9, 2008

காலக் கோலம்

ஞாலக் கோளம்
வரையும்
காலக் கோலம்.
கடந்தனவற்றின்
தடயம்
ஞாபக வாசலின்
வயிற்றுக்குள்.
கடப்பனவற்றின்
சகடம்
யதார்த்தப் பாதையில்
தொடர்ச்சியாக.
கடக்கப்போவன
மூன்றாவது விழியில்
காட்சியாக.

பி.கு: 1996ல் வெளியான "விழிப்புத் தவங்கள்" என்ற என் கவிதைப் புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு கவிதை.

No comments: