Saturday, April 26, 2008

துடிதுடிக்குது கவிதை

மேலே
இன்னும் மேலே
இன்னும் இன்னும் மேலே
சுழன்று
சுழன்று
சுழன்று
பறந்தேறுது
தும்பி

கீழே
இன்னும் கீழே
இன்னும் இன்னும் கீழே
சுழன்று
சுழன்று
சுழன்று
மயங்கி விழுகுது
சருகு

அந்தரத்தில்
இரண்டும் வசப்படாது
ஏங்கி
இன்னும் ஏங்கி
இன்னும் இன்னும் ஏங்கி
பார்த்துப்
பார்த்துப்
பார்த்துத்
துடிதுடிக்குது
கவிதை

No comments: