Saturday, April 26, 2008

மிருகமும் மனிதமும்

நான்கு கால்கள்
கூட்டினால் ஒன்று
இயற்கையின் கணக்கில்
மிருகம்
அடைந்துவிட்டது முழுமை

இரண்டு கால்கள்
கூட்டினால் அரை
இயற்கையின் கணக்கில்
மனிதம்
அடையவில்லை முழுமை

அரைக்கு மேலே
முயன்று எழுந்தாலொழிய
மனிதம்
முழுமையாதல் அசம்பவம்

அரைக்கு மேலே
மிக மிக உயரத்தில்
வைக்கப்பட்டிருக்கிறது
தலை

கால்கள் இரண்டும்
இல்லையென்றாலும்
மனிதம்
முழுமையாக முடிவதே
எண் சாண் உடம்புக்குப்
பிரதானமான
அவ்வொன்றால் தான்

தலையின்றேல்
பூஜ்ஜியந் தான்
தலையிருந்தும்
பயன்படவில்லையென்றால்
மனிதம்
முழுமையடைய முடியாத
அரை தான்

இயற்கையால்
படைக்கப் பட்டிருக்கிறது
ஒரு பாதியாய்
மனிதம்
அரைக்கு மேலே
முயன்று எழுந்தாலொழிய
மனிதம்
முழுமையாதல் அசம்பவம்

No comments: