Saturday, April 5, 2008

முடியவில்லை

கடவுட் காதலனோடு ஒன்றிய
என் திறந்த இருதயத்திலிருந்து

ஒலிபரப்பாகும் ஆனந்த ராகங்களை
எனக்குள்ளேயே அடக்க முடியவில்லை
எல்லாப் பக்கங்களிலும் பரவும்
அப்பரமானந்தத்தை
என்னால் நிறுத்த முடியவில்லை.
கடவுட் காதலனே!
நம் இணைப்பைத் தடுப்பதற்கு
எதற்கும் சக்தியில்லை.
உன்னை நான் மறக்கவும்
என்னை நீ பிரியவும்
இனி எப்போதும்
சாத்தியமில்லை


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "முடியவில்லை" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

No comments: