Tuesday, April 8, 2008

நல்வாலைத் தமிழில் இனி பேசு நீயே

பொய்யுலக இருளில் ஆழ்ந்து ஆழ்ந்து
வலிகளில் நீ தொலைந்து போனாய்
வலிகளுள் உன் வலிமை கண்டு
உன்னை நீ மீட்டுக் கொண்டாய்
மெய்யுலக அருளில் ஆழ ஆழ
தங்கமெனப் புடம் போடப்பட்டு
மின்னியெழும் பொன்னியாவாய்

என்றே உன் அண்ணன் சொல்ல
தங்காய் அவன் பேச்சைக் கேட்டாய்
நன்றி சொல்வேன் அண்ணன் நானே
நல்வாலைத் தமிழில் இனி பேசு நீயே
இவ்வையகம் அதைக் கேட்டு உய்யும்

No comments: