Saturday, April 26, 2008

கூண்டை உடை

உன்னால்
எவ்வளவு உயரப் பறக்க முடியும்
என்பதல்ல கேள்வி

உனக்குச்
சிறகுகள் இருப்பதை
முதலில் அறி

அலகுகள்
தானியங் கொத்த மட்டுமல்ல
அடைந்து கிடக்கும் கூண்டை
உடைக்க அறிந்த வல்லவை தாம்
எனபதை ஞாபகங் கொள்

கூண்டை உடைத்துச்
சிறகை விரித்த பின்
நீ
பறக்க முடிந்த வானத்திற்கு
எல்லையில்லை

வானத்திற்கு வந்த பின்
உன்னால்
எவ்வளவு உயரப் பறக்க முடியும்
என்பதல்ல கேள்வி

இன்னும் மேலே
இன்னும் மேலே
இன்னும் மேலே
எழும்பி
எழும்பி
எழும்பியும்
தீர்ந்து போகாது
வானம்

இதை
நீ
அறியவும் முடியாது
பறந்தாலொழிய

அந்தக் கேள்வி தான்
நீ
அடைந்திருக்கும் கூண்டு

கூண்டை உடைத்துச்
சிறகை விரி

இப்போதே

No comments: