Saturday, April 5, 2008

விண்ணுலக வாழ்வு வேண்டும்

"காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்
"
என்ற அமர கவி பாரதியின்
ஒளி வாக்கு அருளும்
ஒருமையில் நின்று
உலக உயிர்த்திரள் அனைத்தும்
என் குடும்பம் என்றே
அன்பால் அரவணைத்து
ஒன்றே குலமாய்
என்றே எழுமோ
இம்மனிதம்
அன்றே இம்மண்ணில்
தேவமாம்
விண்ணுலக வாழ்வின் விடியல்.

மண்ணுலக வாழ்வு போதுமென்றாய்
இலங்கைப் பெண்ணே!
விண்ணுலக வாழ்வின் விடியலுக்கு
ஏங்குகின்றேன் நானே!


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "மண்ணுலக வாழ்வு போதும்..!" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

No comments: