Sunday, April 27, 2008

மேற்கைச் செதுக்கடா மானுடா

வீரியம் போனது எங்கே - நல்ல
காரியம் தூங்குது இங்கே
சூரியன் செத்ததா மேற்கே - வந்த
காரிருள் திசைகளைத் தின்றதா

கனவுகள் கண்களைத் தின்றதா - தோளில்
தினவுகள் தீர்ந்தும் போனதா
முடக்கம் உடம்பைக் கொன்றதா - அதில்
அடங்கும் உயிரும் சென்றதா

மேற்கைச் செதுக்கடா மானுடா - அதை
மாற்றிக் கிழக்காய்ச் செய்யடா
சிதறும் மேற்கின் சில்லுகள் - புது
உதயம் சேர்க்கும் பூமியில்

வீரியம் இருக்குது இங்கே - நல்ல
காரியம் சிறக்குது இங்கே
சூரியன் செத்தால் என்ன - புதுச்
சூரியன் செய்யடா மானுடா

காரிருளை உருக்கடா மானுடா - எழுதும்
வீரிய மை உருவாக்கிப் போடடா
காரிருளை நிரப்பிய பேனாக்கள் - கவிதைச்
சீரெழுத விடியும் கனாக்கள்

No comments: