Tuesday, April 15, 2008

அருட்செலவம்

அலைபாயும் மனம்
மறந்த ஆதியாம் இருதயத்தில் அடங்கப்
பாயும் அருளே
பொருளாம்
அந்தம்
அறிக சிவா
ஏளனமாய்ச் சிரிக்கும்
உம் உள்ளத்தின் உள்ளுள்ளே
நீவிர் ஆழ ஆழ
மூளையின் மறை கழன்று
சுதந்திரமாய்ச் சுழலும் செல்கள்
ஒவ்வொன்றும் உமக்குச் சொல்லும்
"செல்வத்துட் செல்வம் அருட்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை
"

தமிழ் மன்றத்தில் சிவா அவர்களின் "ஏளனச் சிரிப்பு!!!" கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

No comments: