Monday, April 28, 2008

கலகம்

வெள்ளைச் சுவர்

உறிஞ்சிய இரத்தமெல்லாம்
உறைந்து
உள்ளே செங்கற்களாய்

எரிந்த எலும்புகளின்
சாம்பலையும்
புதைந்து மக்கிய உடம்புகளின்
மணலையும்
கண்ணீரிலும்
வியர்வையிலும்
கலந்து செய்த
சிமெண்டுக் கலவையில்
பிணைக்கப் பட்டு
வெளியே
பூசி மழுப்பப்பட்டு
அழகாகக் காட்சி தரும்
வெள்ளைச் சுவர்

சமாதானம்
சமாதானம்
சமாதானம்
என்று சதா போதிக்கிறது

இன்னொரு வெள்ளைச் சுவருக்குக்
கச்சாப் பொருளாகித்
தொலையுமுன்
இந்த வெள்ளைச் சுவரைத்
தகர்க்கப் போகிறேன்
நான்

இதன் பின்
ஏமாற்றும்
ஒவ்வொரு வெள்ளைச் சுவரையும்
தகர்ப்பேன்

சமாதானங் கற்றுப்
பிணமாவதிலுங்
கலகக்காரனாய்
வாழ்வதே மேல்

கலகம்
கலகம்
கலகம்
வாழ்வின் போர்ப்பறை
கேட்கிறது

வெள்ளைச் சுவர்கள்
அதிர

No comments: