Wednesday, April 9, 2008

நீ

காலத் துடிப்போடு
கலந்த
காம மௌனம்.
விரல்கள் மீட்டாமலும்
மனத்தில் ஒலிக்கும்
மோகனம்.
ஒலி
வரி
வடிவமின்றி
உணர்ச்சி நிலையில்
இயங்கும் மொழி.
என்னைத் தவிர
எதுவுமே இல்லாத
ஒரு நாத்திகக் கோயில்.
என் தமிழருவியின்
ஜீவ முகடு.
கயமை களைந்த
கருத்தின் கரு.
என் எண்ண வேரைத்
தாங்கும்
மண்ணகம்.
விளையும் விடியலை
ஏற்கும்
விண்ணகம்.
விழிப்பு மயக்கம்.
படைக்கும் இயக்கம்.
வீர மனித விடியல்.

பி.கு: 1996ல் வெளியான "விழிப்புத் தவங்கள்" என்ற என் கவிதைப் புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு கவிதை.

No comments: