Saturday, April 26, 2008

"முடியும்!"

"முடியாது."
என்பது செத்துப் போன பிணம்

"முடியுமா?"
என்பது காண முடியாத பேய்

"முடியும்!"
என்பதே வாழும் மனிதம்

அஃறிணைகள்
முன்னிரண்டையும்
சொந்தம் கொண்டாடும்
சுடுகாடு

உயர்திணை
மனிதத்துக்கு
சொந்தமாகும்
வளநாடு

"முடியாது."
முடங்கியிருத்தல்

"முடியுமா?"
முடங்கியிருக்க யோசித்தல்

"முடியும்!"
முனையிலே முகத்து நின்று
எண்ணியது முடித்தல்

முன்னிரண்டும்
நெளியும் புழுவினும்
இழிநிலை

"முடியும்!"
மனிதத்தின்
அமர நிலை

No comments: