Saturday, April 5, 2008

எழுந்து நில்

ஒப்பனை வாழ்வெனும்
படுகுழியிலிருந்தே
எழுந்து நில்.
எழுந்து நின்றே
படுகுழியில் கிடக்கும்
சக நண்பனைப் பார்த்தே சொல்:
எழுந்து நில்
நீ
எழுந்து நின்றால்
உன் நெற்றி நெருப்பு
சூரியனையும் சுட்டுவிடும்.

வாலை நீ சொன்னால்
அவன் நிச்சயம்
உன்னோடே எழுந்திடுவான்.
கண் கூசும் உம் ஆன்ம ஒளியில்
கறுத்துப் போன நிலையெல்லாம்
வெளுத்துப் போகும்.

இலங்கைப் பெண்ணே
எழுக நீயே!
எழுந்தே எம்மை எழுப்பும்
பேருறுதியை முழங்கு!


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "கூசுகின்றது...!" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

No comments: