Saturday, April 5, 2008

புதுப் பரிமாணம்

விக்கிக்கும் வலிகள் யாவும் போகும்
விடை தெரியும் கேள்விகள் அத்தனைக்கும்
வியப்பாய் உன்னுள் ஞான வாலை எழுகின்றாள்
வித்தியாசமான் கருத்துக்கள் அனைவர்க்கும் தருகின்றாள்
விறுவிறுப்பான அவள் கவிநடை காண
விரைகின்றார் உலகத்தோர்
வியத்தகு வாலைக்குமரியவள் இலங்கைப் பெண் மூலம்
விழிப்படையச் செய்தாள் உலக உயிர்த்திரளனைத்தும்


விரும்பியே யாவரும் வாலை காட்டும் வழி நிற்க
விழிக்கும் மனிதத்தில் அமர தேவம்
வலிகள் யாவும் பறந்து போக
விளையும் புது வலிமையை
வியந்து போற்றும் மனிதம்
வித்தகராய் எழுவர் பெண்ணும் ஆணும் சரி நிகர் சமானமாய்
வாலையருளால் தேவ தேவியராவர் அவர் நிஜமாய்


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "என் திரிக்கு புதுப்பரிமாணம் தந்த நாகராஜா ஐயாவுக்கு...!" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

No comments: