Saturday, April 5, 2008

நற்சேதி

வெளியென்ற அகண்ட வீட்டுக்குள்
ஒளியென்ற உறுதியாம் நற்சேதி கண்டு
வளிவாலை ஆட்டி
அளியமுதம் உண்டே
களிக்கின்ற மெய்கண்டு

மூளையின் மறை கழன்றே
இருதயக் குகை வாழ்ப்
பித்தன் நான் உறுதி சொல்கின்றேன்:
வன்பெனும் போர் நின்று
அன்பெனும் உயிர் வந்து
மரணம் வெல்லும்
பேரின்பப் பெருவாழ்வென்னும்
பெரு நிலையே நாடாக
வாழ்கின்ற நன்னாள் வரும்
நனி மிக விரைவிலேயே!

அறிக நீ
நல்லிலங்கைப் பெண்ணே!
உன்னுள் உறையும்
வாலைத் தாயின்
உறுதி இதுவே
யன்றி
இப்பித்தன் பிதற்றல்ல
இதுவே காண்!


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் இக்கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

No comments: