Wednesday, April 23, 2008

சிறை வாசம்

இந்த சிறைக்குள்
இன்னும்
எத்தனை நாள்?!

நூலிழைக் கம்பிகளை
ஓர் நொடியில்
அறுக்க முடியும்.

அங்கங்களை அசைக்கத்
தலை
உத்தரவிட்டால் போதும்.

தலையோ
வேறு யாருக்கோ
அடங்கிக் கிடக்கிறது
அங்கங்களெல்லாம்
முடங்கிக் கிடக்க.

யாரோ
ஏதோ
உத்தரவிட
தலை
யோசிக்காமல்
ஆடிக் கொண்டிருக்கிறது.

சிறை வாசம் தொடர்கிறது.

ஆட வைத்து
ஆட வைத்து
தலை கழற்ற
சதி நடக்கிறது.

விதியென்று
கதி கெட்டு
மதி நம்ப
ஆட்டுவோரைத்
துதி செய்து
சிறை வாசம் தொடர்கிறது.

No comments: