Saturday, April 5, 2008

எப்படி சொல்வது???

தனிப்பெருங்கருணையாம் வள்ளலே!
அருட்பெருஞ்ஜோதியாம்
உமது வெள்ளங்கியால்

எப்போதும் என்னைப் போர்த்தி
உடலென்ற என் ஆடை
கிழிந்து நசியாமல்
மெய்யாய் அது நிலைக்க
"எல்லாந் தழிவிய
முழுமையாம் ஒருமையில்
ஊன்றியே
எப்போதும் நில்
"
என்ற பேருபதேசமும் அருளிய
உம் பேரன்புக்கு நன்றி
எப்படி சொல்வது???
பிறந்தால் மரணமே விதி
என்ற மாயச் சதியறுக்க
நீயே கதியென்று
நானும் இருக்கின்றேன்
என் ஐயனே!

பேரின்பப் பெருவாழ்வை
எனக்கு மட்டுமின்றி
எல்லோர்க்கும் அருள்வாயே!

அப்படியே ஆகுக
என் மகனே

என்றே உறுதி சொல்லும்
உம் கருணைக்கு நன்றி
எப்படி சொல்வது???


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "எப்படி சொல்வது...???" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

No comments: