Tuesday, April 8, 2008

தேவமாம் விடியலாய்

என் மனதில்
உன் காதல் விழுகின்றது
உயிரும் கரைகின்றது
கடவுட் காதலனே

என்னை நான்
தொலைத்தேன்
உன் மூச்சினில்
நான் வாழ்கின்றேன்
எனக்குத் தெரிகிறது
உன் அருவம்

உன்னிலே நானும்
சங்கமமானேன்
இகத்தில் என்னை வைத்தும்
பர வாழ்வை உணர்த்தினாய்
உன்னால் பரமானந்தக்
களி தொடர்கின்றது

என்னில் நீ
பூரணமாய் நிறைந்து விட்டாய்
எனக்குள்ளே மறைந்து விட்டாய்
எழுகிறேன் மண்ணில்
தேவமாம் விடியலாய்


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "விடியலை தேடி..." கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

No comments: