Saturday, April 26, 2008

எது நிஜம்!?

எது நிஜம்!?
ஒளிரும் விண்மீனா
மேக மூட்டமா!?
கரிய இரவில்
இருண்ட வானில்
கண்ணுக்குப் புலப்படாத
விண்மீனைக்
கண்டு விட்டால்
நிஜம் வேறாய்
நிஜத்தின் நிஜம் வேறாய்ப்
புரிந்து விடும்.
மேக மூட்டத்தைக்
கண்டும் காணாமல்
ஒளிரும் விண்மீனைக்
காணாமல் கண்டும்
நிஜம் மீறும்
தீர்க்கப் பார்வைகளால் தான்
ஞானம் கிட்டும்.
அது வரை
எது நிஜம்
என்ற கேள்வியும் எழாத
அஞ்ஞானமே
உன் நிஜத்தின் நிஜம்.

No comments: