Tuesday, April 8, 2008

ஒளிர்கிறேன்

பல யுகங்கள்
இருட்குழியாய்
ஒளி காணத் தவங்கிடந்தேன்.
எனக்கிரங்கி
ஓர் நாள்
நடுநிசியில் பட்டப்பகல் வெளிச்சமாய்
எனக்குள் இறங்கி
இருட்குழியென்னை
ஜோதி மலையாக ஒளிரச்செய்தார்
நாயகன்.
யுக யுகமாய்த் தாழ்ந்து இருண்டு கிடந்த நான்
இன்று உயர்ந்து ஒளிர்கிறேன்
நாயகன் வரவால்.


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "தவித்தேன்..." கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

No comments: