Saturday, April 5, 2008

என் புதுப் பிரகடனம்

சோகத்தைத் துடைத்து
மீதமாயிருக்கிற
முகத்தின் ஒளியைக்
கெட்டியாய்ப் பிடித்து
அகத்துள் ஆழ மூழ்கித்
தகதகவெனத் தணலாய்ச் சுடும்
அகத் தீயின்
ஆன்ம ஒளியாய்

இகத்தில் எழுகிறேன்
நல்லிலங்கைப் பெண்ணாம் நானே!
எழுந்தே
இகத்தில் பர ஒளியாய்ச்
சுடச்சுடச் சுடர் விடுகிறேன் நான்
வாலையென்னும் ஞானப்பெண்ணே!



முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "கவசமாகிய புன்னகை!" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

No comments: