Saturday, April 5, 2008

எந்நாளோ!

கடவுளே!
உன் உருவம் அருவமாதலால்
எப்படி அதை
என் எண்ணத்திலிருந்து அழிப்பேன்!
என் உருவும்
அருவமான உன் உருவே
என்றே அறிந்துணர்ந்தே

என் உருவும்
அழியா நிலையெய்த
அழியா அவ்வுருவை
அருவமான் உன் உருவில்
நான் ஒளிக்கும்
நன்னாள் எந்நாளோ!
கடவுளே!
அந்நாளை
நனி மிக விரைந்தே
எனக்கருள்வாயே!


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் இக்கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

No comments: