Tuesday, April 8, 2008

முன்னேற்றம்

வலிகள் மிகுதியாய்
வந்த போதும்
வாழ்வை நான்
வெறுக்கவில்லை

வலிமையோடு
வலிகளே படிகளாக
வாழ்வில் நான்
முன்னேறுகின்றேன்

இருதயத்தில் உனைக் கண்டேன்
கடவுட் காதலனே!

பொய்ந்நிழல்கள் போகவே
மெய்யொளியாய் விடிகின்றேன்

எத்தனை உருவங்கள்
எனைக் கடந்து சென்றாலும்
உன் உருவம் என்
இருதயத்திலிருந்து அழியாது


எப்போதும் ஒன்றியே
உனைக் காதல் செய்தே
நான் வாழ்கிறேன்
எனக்குள் நீ இறங்க
உன்னில் நான் ஏறுகிறேன்
கடவுட் காதலனே!


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "ஏமாற்றம்...!" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

No comments: