Tuesday, April 8, 2008

கிறுக்கல்கள்

கிறு கிறு என்றுன் தலை சுற்றும்
இம்மறை கழன்றவன் கிறுக்கல்களை
நீ படித்தால்
உன் மூளையின் மறைகள் கழலும்
மடல்கள் விரியும்
மனக் கதவம் திறக்கும்
இருதய ஒளியில் உன் மெய்
உண்மையாய் ஒளிரும்
வலிகள் விலகும்
வலிமை மீளூம்
இக்கிறுக்கல்கள்
உனக்குச் "சுளீர்" என உறைக்கும்
உன்னைப் "பளார்" என அறையும்
என்றாலுந் தங்காய்
இவற்றை
உவந்தேற்றே நீ எழுகின்றாய்
மகிழ்கின்றேன் நானே!

No comments: