Saturday, April 5, 2008

ஆன்மா சொல்லுகிறது

மனமெனும் நற்பெண்ணே!
என்னை விட்டு
நீ தானே பிரிந்தாய்?
பின் யார் மேல் புகார்
சொல்வாய்?
என்னை விட்டுப்
பிரிந்ததாலேயே
நொறுங்கின உன் கனவுகள்.
எப்போதும் உன்னை விட்டு
நான் பிரிவதில்லை.
இப்போதும்
உன்னருகிலேயே இருக்கிறேன்.
மனமெனும் நற்பெண்ணே!

இதை நீ இப்போதே அறிந்தாலே
அதுவே
நீ என்னை எப்போதும் பிரியாமல்
என்றும் இணைந்திருக்க உதவும்
ஒரு சந்தர்ப்பமே.
மனமெனும் நற்பெண்ணே!
எப்போதும் உன்னை விட்டு
நான் பிரிவதில்லை.
இப்போதும்
உன்னருகிலேயே இருக்கிறேன்.
இதை நீ அறிவாயே!
என்னோடு எப்போதும்
இணைந்தே இருப்பாயே!


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "மனம் எண்ணுகிறது!" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

No comments: