Saturday, April 5, 2008

வெளிச்சப் பாசறை

இருதய மந்திரமே
இதய யந்திரத்தை
இயக்கும் தந்திரம்.

இத்தந்திரம் தேர்ந்தே
நற்போதமே சொந்தமாக
மரணத்தை வென்ற
பேரின்பப் பெருவாழ்வில்
எப்போதும் நின்றே
உள்ள இருட்டறைகளை
ஒளி வெள்ளத்தில்
வெளிச்சப் பாசறைகளாய்
மாற்றுவாயே
நல்லிலங்கைப் பெண்ணே!
ஞான வாலையின் மகளே!

என் அன்புத் தங்கையே!
உன் அண்ணன் சொல் கேட்பாயே!
அவன் வயிற்றில் பால் வார்ப்பாயே
இன்றே
இக்கணமே!


முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "இருட்டறை...!" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை

No comments: